Posts

Showing posts from July, 2018

கல்லூரி சீருடையோடு மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றும் கேரள பெண்..

Image
கேரளா மாநிலம் அலப்புழாவை சேர்த்தவர் ஹனன் இவருடைய வயது 21. இவர் கேரளமாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில்  பி.எஸ்.சி (கெமிஸ்ட்ரி) இறுதியாண்டு படித்து வருகிறார். இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக மாலை நேரத்தில் மீன் விற்பனை செய்து தன் குடும்பத்தை காப்பாற்றிவந்துள்ளார். இவருடைய செயலை பார்த்து பாராட்டும் விதமாக கேரளாவின் பிரபல நாளிதழ் ஒன்றில் இவரது கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்டுரையை படித்தவர்களுக்கு இவர் மீது இரக்கம் ஏற்பட்டது, பிறகு இவருக்கு பலரும் உதவ முன் வந்தனர்.ஹனனின் இந்த கட்டுரையை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர்.  அதில் இந்த மாணவின் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை பார்த்து பலர் பாராட்டி கருத்து தெரிவித்தனர்.ஆனால் சிலர் இவரை கேவலமாக கிண்டல் செய்து, பின் இது பொய் பணம் பறிப்பதிற்க்காக இவள் போடும் திட்டம் எனவும் சிலர் கருத்து தெரிவித்து பல  வதந்திகளை பரப்பியுள்ளனர்.இந்த நேரத்தில் ஹனன் மிகவும் வருத்தத்திற்கு உள்ளானார்.மேலும் இவருக்கு ஆறுதல் கூறும் விதமாக இவர் படிக்கும் கல்லூரியின் முதல்வரும், அவரது கல்லூரி நண்பர்களும் இவரது கதை உண்மை தான் என்று கூறியுள்ளனர்

இணையத்தை கலக்கும் வட சென்னை படத்தின் டீஸர் வீடியோ

Image
இணையத்தை கலக்கும் வட சென்னை படத்தின் டீஸர் வீடியோ. வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எங்களின் இணையதளத்தின் வருகைக்கு மிக்க நன்றி இங்கு அனைத்து விதமான அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள், வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம்,மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள் பகிரப்படும்.உங்களின் மேலான ஆதரவை எங்களின் இணையதளத்துக்கு தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

மனநலம் பாதிப்படைந்தவரை சுத்தப்படுத்தி அழகுபார்த்த காவலர்

Image
இப்போதெல்லாம் மக்கள் பலருக்கும் காவலர்கள் மீது உள்ள நம்பிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. ஆனால் காவலர் பணியை சேவையாக செய்துவரும் காவலர்களும் அதிகம் உள்ளனர். அப்படிதான் கோவை செல்லவபுரம் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர்தான் பிரதீப். இவர் பேரூர் சாலையில் இருக்கும் தணிக்கை நிலையத்தில் வேலை பார்த்து வருகின்றார்.இவர் தற்போது செய்த ஒரு சேவை மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை அவருக்கு பெற்றுதந்துள்ளது. இவர் தான் வேலை பார்க்கும் பகுதியில் பல நாட்களாக அழுக்காகவும், அதிக முடியுடன் இருந்த ஒரு மன நலம் பாதிக்கபட்ட பிச்சைக்காரரை , தன் வேலைக்கு இடைப்பட்ட நேரத்தில் அந்த நபரை சுத்தம் செய்து, தன் கையால் முடிவெட்டி, புது துணி உடுத்தி அழகுபடுத்தியுள்ளார். இது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த காவலரை அனைவரும் பாராட்டியும் வருகின்றனர். இது போன்ற காவல்துறை பணியாளர்களை ஊக்கப்படுத்த, நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம். மேலும் பிரதீப் அவர்கள் இந்த சேவையை மேலும், மேலும் சிறப்பாக செய்ய நாம் வாழ்த்துவோம்.

ஒரே நாளில் உலகின் அழகிய சிறுமியாக உருவான நைஜீரியாவைச் சேர்ந்த ஜாரே.

Image
நைஜிரியாவை சேர்ந்த 5 வயதான சிறுமி ஒரே நாளில் உலக அழகியாக  அங்கீகரிக்கப்பட்டு  இருக்கிறாள் . இவளது தோற்றம் மிகவும்  வசீகரமானது.  இவளுடைய கண்களோ கவிதை பாடும் கண்கள் , காண்போரை கவர்ந்திழுக்கும் கூந்தல் ,மிகவும்  மென்மையான சருமம் என அனைத்து அழகிய அம்சத்துக்கும் இந்த சிறுமி ஒரு வரம்.  மொபே பாமுயிவா என்ற புகைப்பட  கலைஞர் இந்த சிறுமியின் அழகை பார்த்து  ஆச்சாரியபட்டு பல புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து  இவள் " என்ன ஒரு அழகு !... மனிதபிறவி யில் உலவும்  ஒரு தேவதை என  பரவசபட்டுள்ளார். பிறகு இவள் ஒரு தேவதை என பெயர் சூட்டி, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார் .  தற்போது இந்த புகைப்பட கலைஞர்  இந்த சிறுமியை  புன்னகைத்தோ அல்லது சத்தமிட்டு சிரித்தோ புகைப்படம் எடுத்திருக்கலாம் , ஆனால் இவரோ நம் கண்கள் வழியாக இவளின் இயல்பான தோற்றத்தினை காணவைத்திருக்கிறேன் என அந்த புகைப்படகலைஞர் கூறியுள்ளார் . இந்த அழகிய சிறுமி ஜாரேயின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்தவர்கள் பரவசம் அடைந்து  இந்த சிறுமி உலகின் அழகிய சிறுமி என கூறியுள்ளனர்.  ஜாரே என்ற இந்த சிறுமிக்கு இரண

இனையத்தில் வைரலாகும் தமிழ்ப்படம் 2 நீக்கப்பட்ட கடைசி பாகம்

Image
இனையத்தில் வைரலாகும் தமிழ்ப்படம் 2 நீக்கப்பட்ட கடைசி பாகம். தமிழ் படத்தின் இரண்டாம் பாகம்  இந்த மாதம் ஜூலை 12 ம் நாள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் படக்குழு தாங்கள் நீக்கப்பட்ட  பகுதிகளை இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தனர். தற்போது இதன் கடைசி நீக்கப்பட்ட பகுதிகளை வெளியிட்டுள்ளனர். தற்போது அது வைரலாகி வருகின்றது. அதன் வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  எங்களின் இணையதளத்தின் வருகைக்கு மிக்க நன்றி இங்கு அனைத்து விதமான அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள், வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம்,மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள் பகிரப்படும்.உங்களின் மேலான ஆதரவை எங்களின் இணையதளத்துக்கு தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

கணவருக்காக மனைவி செய்ததை பாருங்கள் - கண்கலங்க வைக்கும் பதிவு!

Image
சில நாட்களுக்கு முன்பு அந்திரமாநிலத்தில் நடந்த ஒரு சோகமான நிகழ்வு அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளது. அந்திரமாநிலம் சித்தூரை சேர்ந்தவர் பாபு. இவர் அப்பகுதியில் கட்டிட மேஸ்திரியாக வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கு சிலநாட்களாக உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளது. அவரை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு மனைவி அவரை கொண்டுசேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலன் அழிக்காமல் அவர் இறந்து விடுகின்றார். மனைவியால் கணவரை வீட்டுக்கு கொண்டுசெல்லவும் மற்றும் இறுதி சடங்கு செய்யவும் போதிய பணம் இல்லாததால், அரசு மருத்துவமனைக்கு வெளியிலேயே பிச்சை எடுத்துள்ளார். இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.

தமிழ் மொழி இசையின் சிறப்பை போற்றும் விதமாக , தமிழ் பாடலை வெளியிட்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்..!

Image
மொழி, இனம், மற்றும் மதம் போற்றவற்றை இசை எப்படி இணைக்கின்றது  என்பதை ஒரு தமிழ் பாடல் மூலம் உணர்ந்துகொண்டேன் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். இதை பற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு தமிழ் பாடல் ஒன்றை பகிர்ந்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. அதன் வீடியோ இணப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Enjoyed this medley of 2 Tamil songs by local a cappella group 1023. A gd example of how music transcends language, race & religion! – LHL https://t.co/ia9clPnOvE — Lee Hsien Loong (@leehsienloong) July 26, 2018

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு போட்டு அசத்தும் முதியவர்..

Image
இப்போது உள்ள உணவகங்கள் எல்லாம் லாப நோக்கத்துக்காக மட்டுமே ஆரம்பிக்கப்படுகின்றன. அனால் இங்கு; மதுரையை சேர்ந்த ஒரு முதியவர் கடந்த 50 வருடங்களாக குறைந்த விலையில் மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றார். மதுரையை சேர்ந்த முதியவர் ராமுசேர்வை, இவர் 1960களின் கூலி தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். பசிக்காக பல உணவங்களில் பாத்திரம் பூசி வேலைபார்த்துள்ளார்.1967ல் அவர் சொந்தமாக தொழில்செய்ய ஆசைப்பட்டுளார், அப்போது வடலூர் இராமலிங்கம் கோவிலுக்கு சென்று வணங்கி.அங்குள்ள அன்னதான கூடத்தில் தான் பசியாறிஉள்ளார். பின்பு அவர் மனதில் நாமும் மக்களுக்கு இது போன்ற சேவையை செய்யவேண்டும் என்று நினைத்து, அவர் மனைவியின் உதவியுடன்  1967ல் ஹோட்டல் கடை திறந்துள்ளார். 1970 முதல் 2000 முதல் 5 ரூபாய்க்கு அன்னம் வழங்கி உள்ளார்.2000 க்கு பிறகு 10 ரூபாய்க்கு உணவு வழங்கிஉள்ளார். தனக்கு வரும் லாபத்தை அப்படியே மக்களுக்கு சேவை செய்து மன மகிழ்ச்சியோடு உள்ளார்.அங்கு வரும் மக்களும் ஆனந்தமாய் சாப்பிட்டு நன்கொடையும் குடுத்து செல்கின்றனர்.இவரின் சேவையை நாமும் வாழ்த்துவோம்.

டொனால்ட் ட்ரம்ப்யை கடவுளாக பூஜிக்கும் ஒரு இந்திய குடும்பம்

Image
உலகத்தில பல இடங்களில் பலவிதமான கடவுளுக்கு பூஜைகள் நடத்துவார்கள் , ஆனால் இங்கு இந்தியர் ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு தினமும் பூஜை செய்து அவரை வழிபட்டு வருகின்றார். தெலுங்கானா மாநிலத்தில் கோனே என்னும் கிராமத்தில் விவசாயியாக வேலைபார்ப்பவர் க்ரிஷ் ராஜு . இவருக்கு வயது 31. இவர் தற்போது இந்தியாவின் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றார். இவர் கடந்த மூன்று வருடங்களாக  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்ன் புகைப்படத்தை வைத்து கொண்டு தினமும் நாள் தவறாமல் அவரை பூஜித்து வருகின்றார். தொடக்கத்தில் அவரை அவர் குடும்பத்தினர் அவரை திட்டி, தடுத்துள்ளனர். ஆனால் டிரம்ப்ன் மீது கொண்ட பக்தியினால் குடும்பத்தினரையும் மீறி தினமும் அவருடைய புகைப்படத்திற்கு பூஜை செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரது குடும்பத்தாரையும் சமாதானபடுத்தி அவர்களையும் பூஜையில் கலந்துகொள்ள வைத்துள்ளார்.தற்போது குடுப்பதினார் அனைவரும் தவறாமல் அந்த பூஜையில் கலந்து கொண்டு டிரம்பை கடவுளாக ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும் தன் விரலை பிளேடால் வெட்டி கொண்டு ரத்தத்தாலும் பூஜை செய்துள்ளார். க்ரிஷ் ராஜுவை,

ரோட்டில் சடை முடியுடன் சுற்றிதிரிந்த நபருக்கு நடந்ததை நீங்களே பாருங்கள்..

Image
இப்போதெல்லாம் மனித நேயம் என்பது மக்களிடம் குறைந்து கொண்டே போய்க்கொண்டிருக்கின்றது. ஆனால் ஒரு சில மனிதரிடம் அது அதிகமாகவே காணப்படுகின்றது. அப்படித்தான்  இங்கு ஒருவர் நீளமான சடை முடியுடன் ரோட்டில் சுற்றிதிரிந்துள்ளார், அவருக்கு என்ன  நடந்துள்ளது என்று  நீங்களே பாருங்கள். வீடியோ இணைப்பு கீழே  உள்ளது  எங்களின் இணையதளத்தின் வருகைக்கு மிக்க நன்றி இங்கு அனைத்து விதமான அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள், வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம்,மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள் பகிரப்படும்.உங்களின் மேலான ஆதரவை எங்களின் இணையதளத்துக்கு தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

உயிரை கொடுத்து 43 பேரின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்.

Image
இப்போதெல்லாம் குடித்துவிட்டு , மொபைல் பயன்படுத்திவிட்டு வண்டி ஓட்டுவது அதிகமாகி வந்து கொண்டேதான்  இருக்கின்றது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஓட்டுவதால்தான்  எதிரே வருபவர்கள் முதல் ரோட்டின் ஓரம் நடந்து செல்பர்கள் வரை பாதிப்படைகின்றனர். இதற்கும் மத்தியில் தன் உயிரையும் பயணம் வைத்து மற்றவர்களை காப்பாற்றும் ஓட்டுநர்களும் சிலபேர் உள்ளனர். அப்படி ஒரு நிகழ்வைத்தான் இங்கு பார்க்கப்போகிறோம். கேரளாவில் உள்ள கோட்டயத்தை சேர்ந்தவர்தான் மது. இவர் கேரளா அரசு பேருந்து ஓட்டுநர். இவர் கோட்டயத்தில் இருந்து மலப்புரம்க்கு 43 பயணிகளுடன் சென்றுள்ளார். அப்போது திடீர் என நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் ஒட்டி வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடி உள்ளது. அப்போது பேருந்தில் பயணித்த பயணிகள் சப்த்தம் போட்டு அலறி உள்ளனர். இதை உணர்ந்து கொண்ட மது ஹாண்ட் பிரேக்(hand break) உதவியுடன் பேருந்தை நிறுத்தி உள்ளார். ஆனால் அந்த பேருந்திலேயே அவர் உயிர் பிரிந்தது. உயிர் பிரியும் தருவாயிலும் பேருந்தில் பயணித்த அந்த 43 பேரின் உயிரை காப்பாற்றிய அந்த ஓட்டுனருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்

மனைவியின் பாசத்தால், அவருக்கு சிலை வடித்த அன்பு கணவர்

Image
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி இவர் அப்பகுதில் கேபிள் ஆபரேட்டர் வேலையை செய்து வருகின்றார். இவருடைய மனைவி பெரியபிராட்டி அம்மாள். இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவர் இறந்துவிட்டார். இவரின் நினைவாக அவரையே சிற்பமாக செதுக்கி, தினமும் அவரோடு இரண்டு மணி நேரம் பேசிவருகின்றார். ஆசைத்தம்பி, இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இருக்கும் மேட்டுப்பட்டி கிராமம். இவரின் மாமன் மகள் தான் பெரியபிராட்டி அம்மாள். கணவன், மனைவி இருவருக்கும் 1977-ம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது. இருவரும் மிகவும் அன்பும், பாசத்தோடு இருந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. குடும்ப சூழ்நிலை காரணமாக சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளார். மனைவியின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஒரு மளிகை கடை முதலில் நடத்தி உள்ளார். போதிய வருமானம் வரவே , மீண்டும் மனைவியின் அறிவுறுத்தலின் படி கேபிள் டிவி தொடங்கி உள்ளார். அதன் பின் கை நிறைய வருமானம் அவருக்கு வந்தது. பின்பு மனைவியின் விருப்பப்படி நல்ல இடம் வாங்கி வீடும் கட்டி சந்தோசமாக வாழ்ந்துள்ளார். ஆசைத்தம்பியின் அனைத்து ம

இணையத்தில் வைரலாகும் தமிழ்ப்படம் 2 வின் நீக்கப்பட்ட பகுதிகள்

Image
தமிழ் படம் 2 ம் பாகத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் நேற்று யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன் வீடியோ இணைப்பு கீழே கொடுப்பட்டுள்ளது. நேற்று சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அவர் நடித்த 24 படத்தை கலாய்த்து எடுத்த பகுதியை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது தமிழ் படம் 2 பாகத்தின் குழு.  எங்களின் இணையதளத்தின் வருகைக்கு மிக்க நன்றி இங்கு அனைத்து விதமான அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள், வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம்,மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள் பகிரப்படும்.உங்களின் மேலான ஆதரவை எங்களின் இணையதளத்துக்கு தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

கர்ப்பிணி பெண்க்கு படிகட்டாக மாறி உதவிய காவலர்கள் - இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்

Image
நேற்று தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு வந்த  மின்சார ரயில் ஓன்று தண்டவாளத்து சிக்னல் பிரச்னை காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே நிப்பாட்டப்பட்டது. சுமார் இரண்டு மணிக்கும் நேரமாக ரயில் எடுக்கப்படவில்லை. இதனால் பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி சென்று விட்டனர்.  ரயிலில் அமுதா என்ற கர்ப்பிணிப் பெண்ணும் இருந்துள்ளார். தண்டவாளத்திற்கும்  படிற்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருந்ததால் அவரால் கீழிறங்க முடியவில்லை. அதிக நேரமாக அமுதா ரயிலிலிருந்து இறங்க முடியாமல் தவித்தார். அந்த நேரம் அங்கே வந்த போலீஸ்காரர்கள் தனசேகரன் , மணிகண்டன் ஆகியோர் அந்த கர்ப்பிணி பெண்ணின் நிலையைப் புரிந்து கொண்டனர். பின் அவர்கள் படிகள் போல நின்று. அந்த பெண்ணை இறங்க உதவினர். அந்த பெண் அவர்களின் முதுகில் ஏறி மெதுவாக ரயிலிலிருந்து கீழே இறங்கினார். அதேபோல், மேலும் ரயிலில் இறங்க முடியாமல் தவித்த பல முதியவர்கள் இறங்கவும் இரு போலீசாரும்  உதவினர். தக்க சமயத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு கர்ப்பிணி பெண்க்கும்  மற்றும் முதியவர்களுக்கு உதவிய போலீஸ்காரர்களை அங்கு உள்ள பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியதோ